ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 130 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல்


ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 130 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல்
x

கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, 130 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தானின் தென் கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானை உலுக்கிய 6.1 ரிக்டர் அளவிலான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், அங்கு கிட்டத்தட்ட 130 பேர் கொல்லப்பட்டதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளில் பெரும்பாலானவை பக்டிகா மாகாணத்தில் பதிவாகி உள்ளன. நிலநடுக்கம் காரணமாக அங்கு 100 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 250 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தலிபான் நிர்வாகத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் முகமது நாசிம் ஹக்கானி தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணங்களான கோஸ்ட், நங்கர்கார் மாகாணங்களிலும் கட்டிடங்கள் இடிந்து விழந்ததில், பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக பாகிஸ்தானிலும் இன்று அதிகாலை 2.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்திருந்தது. நிலநடுக்கத்தால் அங்கு ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த உடனடி தகவல் வெளியாகவில்லை.


Next Story