ஆப்கானிஸ்தானில் நடந்த சாலை விபத்தில் 8 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் நடந்த சாலை விபத்தில் 8 பேர் பலி
x

ஆப்கானிஸ்தான் சாலை விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

காபுல்,

வடக்கு ஆப்கானிஸ்தானின் ஜாவ்ஜான் மாகாணத்தின் கவாஜா டோகோ மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் எரிபொருள் எடுத்து வந்த டேங்கர் லாரி மீது அதிபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்த சிலர் காயமடைந்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோசமான சாலை நிலைமைகள், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், சவாலான நிலப்பரப்புகள், அதிக சுமை மற்றும் வேகம் போன்ற காரணங்களால் ஆப்கானிஸ்தானில் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.


Next Story