பாகிஸ்தானில் பயங்கரம்: பள்ளியில் துப்பாக்கிச்சூடு; ஆசிரியர் உட்பட 7 பேர் பலி


பாகிஸ்தானில் பயங்கரம்: பள்ளியில் துப்பாக்கிச்சூடு; ஆசிரியர் உட்பட 7 பேர் பலி
x

பாகிஸ்தானில் பள்ளி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 5 ஆசிரியர்கள் உட்பட 7 பேர் பலியாகினர்.

இஸ்லாமபாத்,

பாகிஸ்தானில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில், அமைந்துள்ள வடமேற்கு மாகாணமான, பாராச்சினார் என்ற பகுதி. பழங்குடியினர் வசிக்கும் மாவட்டத்தில் பள்ளி ஒன்றிற்குள் திடீரென புகுந்த மர்ம நபர்கள் சராமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 5 ஆசிரியர்கள் உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என தகவல் வெளியாகவில்லை. இது பயங்கரவாத தாக்குதலா? அல்லது உள்ளூர் மக்களின் சதியா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story