நேபாளத்தில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்


நேபாளத்தில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
x

கோப்புப்படம் 

நேபாள நாட்டில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காத்மாண்டு,

மத்திய நேபாளத்தில் இன்று காலை 6.07 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கம் காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உடனடி சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Next Story