பாரீசில் துப்பாக்கிச்சூட்டிற்கு 3 பேர் உயிரிழப்பு- குற்றவாளி கைது
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
பாரீஸ்,
பிரான்சின் மத்திய பாரிஸில் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். எனினும், தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து குற்றவாளியிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story