ஆப்கானிஸ்தானில் ஒரு மாதத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம்


ஆப்கானிஸ்தானில் ஒரு மாதத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம்
x

ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகரின் தென்கிழக்கு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.



பைசாபாத்,


ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 135 கி.மீ. தொலைவில் இன்று காலை 6.47 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மித அளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.

இதனை நிலநடுக்க அறிவியல் மையம் இன்று தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தானில் ஒரு மாதத்தில் 2-வது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம் இதுவாகும்.

கடந்த ஜனவரி 22-ந்தேதி அந்நாட்டின் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 79 கி.மீ. தொலைவில் காலை 9.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது.


Next Story