உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 25 July 2017 10:15 PM GMT (Updated: 25 July 2017 6:36 PM GMT)

* எகிப்து நாட்டில் வடக்கு சினாய் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த கார் குண்டுவெடிப்பில் அப்பாவி மக்கள் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

* ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையின் உயர் அதிகாரி ஜெனரல் ஜான் நிக்கல்சன் இஸ்லாமாபாத் சென்றார். அவரிடம், அமெரிக்கா தங்களுக்கு வழங்க வேண்டிய கூட்டணி ஆதரவு நிதியை வழங்காமல் நிறுத்திவிட்டதற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா மிகுந்த கவலை வெளியிட்டார்.

*ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* ஈராக் நாட்டினர் 1,400-க்கும் மேற்பட்டோரை நாடு கடத்தும் முடிவுக்கு அமெரிக்காவின் மிச்சிகன் மத்திய நீதிபதி தடை விதித்துள்ளார். இது ஈராக் நாட்டினருக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

* இரட்டை குடியுரிமை விவகாரத்தில் ஆஸ்திரேலிய மந்திரி மேத்யூ கேனவன் பதவி விலகி உள்ளார்.



Next Story