அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு


அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு
x

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனின் வடகிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் உடனடியாக அங்கு விரைந்தனர். அப்போது அங்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்தில் ஒருவர் துப்பாக்கி குண்டுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். 4 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். போலீசார் உடனடியாக அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் போலீசார் வருவதை அறிந்து அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில் தப்பியோடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story