சாராயம் கடத்திய வாலிபர் கைது


சாராயம் கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2023 6:45 PM GMT (Updated: 26 Feb 2023 6:45 PM GMT)

நாகூர் அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூரை அடுத்த திட்டச்சேரி சாலை முட்டம் பஸ் நிலையம் அருகில் நாகூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது. அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் சாராயம் கடத்தி சென்றது தெரிய வந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி செட்டி சிம்ளி பகுதியைச் சேர்ந்த நீலமேகம் மகன் நிஷாந்த் (வயது 23) என்பது தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷாந்தை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story