திருச்சியில் மதுபானக் கடை பாரில் இளைஞர் வெட்டிக் கொலை - 5 பேர் கொண்ட கும்பல் தப்பியோட்டம்


திருச்சியில் மதுபானக் கடை பாரில் இளைஞர் வெட்டிக் கொலை - 5 பேர் கொண்ட கும்பல் தப்பியோட்டம்
x

மதுபானக் கடை பாரில் இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவில் அருகே உள்ள கடையில் மாலை கட்டும் வேலை பார்த்து வந்தவர் பாபு. இந்நிலையில் சமயபுரம் நால்ரோடு அருகே உள்ள மதுபானக் கடை பாரில் பாபு மது அருந்திக் கொண்டு இருந்த போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பாபுவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.




Next Story