இளையோர் தொண்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


இளையோர் தொண்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
x

இளையோர் தொண்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதியில் இருந்து 18 முதல் 29 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு ஆண்டுகள் சமுதாய பணியாற்ற இவர்களுக்கு, மாதம் ரூ.5000 மதிப்பூதியம் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்கள், இளைஞர்கள், மன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முழு நேர மாணவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பங்கள் www.nyks.nic.in என்ற இணைய முகவரியிலும், நேரு யுவகேந்திரா அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் அதற்கான விண்ணப்பத்தை நகல் எடுத்து நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அந்தந்த ஒன்றியங்களில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 9-ந்தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு திருவாரூரில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story