3 வயது குழந்தையுடன் இளம்பெண் மாயம்


3 வயது குழந்தையுடன் இளம்பெண் மாயம்
x

3 வயது குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி கம்பர் தெருவை சேர்ந்தவர் சண்முகராமு. இவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 33). இவர்களுடைய மகள் ஸ்ரீஆசினி (3). இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி புவனேஸ்வரி தனது மகளுடன் திடீரென மாயமானார். இதுகுறித்து புவனேஸ்வரியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து மகளுடன் மாயமான இளம்பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story