குளிக்க சென்ற இடத்தில் வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - போலீஸ் விசாரணை


குளிக்க சென்ற  இடத்தில் வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - போலீஸ் விசாரணை
x

மகேந்திர மங்கலம் அருகே ஏரியில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தர்மபுரி

தர்மபுரி,

கர்நாடகா மாநிலம், பெங்களுரு அருகே ஒசஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சம்பத்.இவருடைய மகன் ஹர்சா (வயது 20).டிப்ளமோ முடித்து பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவர் தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் அருகே தனது உறவினர் ராஜா என்பவரின் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் ஹர்சா பொம்மனூர் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் ஏரிக்கு சென்று பார்த்த போது ஏரியின் கரையில் ஹர்சாவின் செருப்பு மற்றும் உடைகள் இருந்தன. எங்கு தேடியும் கிடைக்காததால்

சந்தேமடைந்த அவர்கள் மகேந்திரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு ஏரிக்குள் இறங்கி அவரை தேடினர்.

அப்போது அவர் ஏரிக்குள் மூழ்கி உயுரிழந்த நிலையில் இருந்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மகேந்திரமங்கலம் போலீசார் உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story