பூந்தமல்லியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை


பூந்தமல்லியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
x

பூந்தமல்லியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

பூந்தமல்லி செட்டி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 36). டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா (33). இவர், தனியார் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். ஏற்கனவே திருமணம் ஆன பிரியா, முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன்பிறகு ஏற்கனவே திருமணமான கார்த்திகேயனை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் நேற்று காலை வீட்டின் அறையில் இருந்த பிரியா, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன், இதுபற்றி பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். பிரியாவுக்கும், கார்த்திகேயனுக்கும் திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Next Story