ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பெண்கள் சாமி தரிசனம்


ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பெண்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 21 July 2023 7:30 PM GMT (Updated: 21 July 2023 7:31 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி தர்மபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி முதல் வெள்ளி

தர்மபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்தில் பூப்பந்தல் அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி நகரில் உள்ள கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், குமாரசாமிப்பேட்டை உழவு தெரு மகா மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், நெசவாளர் நகர் ஓம் சக்தி மாரியம்மன் கோவில், பாரதிபுரம் மாரியம்மன் கோவில், அன்னசாகரம் சக்தி மாரியம்மன் கோவில், மதிகோன்பாளையம் மாரியம்மன் கோவில், வட்டார வளர்ச்சி காலனி முத்து மாரியம்மன் கோவில், கடைவீதி புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

புற்று நாகர்கோவில்

தர்மபுரி செந்தில் நகரில் உள்ள புற்று நாகர்கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பாம்பு புற்றுக்கு பால், முட்டை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோன்று இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவில், அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பச்சையம்மன் கோவில், கொளகத்தூர் பச்சையம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோன்று காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள அஷ்ட வராகி அம்மன் கோவில், ஒகேனக்கல் காவிரி அம்மன் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவையொட்டி அந்தந்த கோவில்களில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story