மழை நீர் வடிகால் வசதிக்கான பணிகள்


மழை நீர் வடிகால் வசதிக்கான பணிகள்
x

மழை நீர் வடிகால் வசதிக்கான பணிகள்

தஞ்சாவூர்

கும்பகோணம்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூ.79.42 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தஞ்சாவூர்-பள்ளியக்ரஹாரம் தொடங்கி கும்பகோணம் நோக்கி ஒரு பிரிவாகவும், திருவலஞ்சுழி தொடங்கி தஞ்சாவூர் நோக்கி ஒரு பிரிவாகவும் நடைபெற்று வருகின்றன. கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் பகுதியில் பசுபதி கோவில், அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி, வழுத்தூர், சரபோஜிராஜபுரம், ரெகுநாதபுரம், பண்டாரவாடை, ராஜகிரி, பாபநாசம், திருப்பாலைத்துறை, சுவாமிமலை ஆகிய 11 இடங்களில் மழைநீர் வடிகால் வசதிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உதவி பொறியாளர் பழனியப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


Related Tags :
Next Story