உழைக்கும் பெண்கள் கருத்தரங்கம்
உழைக்கும் பெண்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகரில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் தொழிலாளர் உதவிஆணையர் மின்னல் கொடி, விருதுநகர் வியாபார தொழில்துறைசங்க தலைவர் வி.வி.எஸ். யோகன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார். கருத்தரங்கில் பெண்களுக்கான சம உரிமை, சமநீதி நிலைநாட்டப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமையற்ற பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் எனபன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story