டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி சாவு


டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி சாவு
x

கீழ்பென்னாத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி சாவு

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே நாரியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 65), கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு டிராக்டரில் நாரியமங்கலத்தில் இருந்து அவலூர்பேட்டைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு டிராக்டரில் அமர்ந்து வந்து கொண்டிருந்தார்.

நாரியமங்கலம் அருகே காக்காபட்டிக்கு வந்தபோது, டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் உட்கார்ந்திருந்த ரங்கநாதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ரங்கநாதனை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.

இதுகுறித்து ரங்கநாதனின் மனைவி குமாரி கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story