மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு


மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
x

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

புதுக்கோட்டை

ஆவூர்:

விராலிமலை ஒன்றியம், மாத்தூர் சிதம்பர நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மகன் ஜோசப் (வயது 30). இவர் மாத்தூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜோசப் மாத்தூரில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து களமாவூருக்கு தவளைமேடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜ்குமார் (30) என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஜோசப் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் இருவரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜோசப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story