ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி


ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
x

கொடைரோடு அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல்

கொடைரோடு அருகே உள்ள மெட்டூர் காலனி தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 39). கூலித்தொழிலாளி. வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மெட்டூர் அருகே திண்டுக்கல்-மதுரை ரெயில் வழித்தடத்தில் ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு குணசேகரன் தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசேகரன் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த குணசேகரனுக்கு வீரமணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.


Next Story