மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி


மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 26 Oct 2022 6:45 PM GMT (Updated: 26 Oct 2022 6:46 PM GMT)

பதிவு எண் இல்லாமல் சென்ற மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

திருவண்ணாமலை

ஆரணி

பதிவு எண் இல்லாமல் சென்ற மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 59). இவர் கடந்த 24-ந் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பதிவு எண் இல்லாமல் சென்ற அடையாளம் தெரியாத மோட்டார்சைக்கிள் நடராஜன் மீது மோதி விட்டு சென்றது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் இறந்து விட்டார். இது குறித்து இறந்த அவரது மகன் சத்யராஜ் ஆரணி தாலுகா போலீசில் கொடுத்தார்.

அதன்பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் இறந்த நடராஜனுக்கு காசியம்மாள் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.


Next Story