தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Oct 2023 7:00 PM GMT (Updated: 5 Oct 2023 7:00 PM GMT)

புளியரையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள புளியரை தாட்கோநகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஜெயராஜ் (வயது 32). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

ஜெயராஜிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குடிபோதையில் வந்த ஜெயராஜ் தனது வீட்டில் உள்ள தகர செட் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story