தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 11 Oct 2023 6:45 PM GMT (Updated: 11 Oct 2023 6:46 PM GMT)

ஆலங்குளம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் மாரிமுத்து (வயது 48). தொழிலாளியான இவர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்களிடம் கடனை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் பூச்சிக் கொல்லி மருந்து குடித்தார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story