தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

மதுகுடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்,

புத்தளம் அருகே உள்ள மணவாளபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன்வில்பிரிட் மோகன் (வயது 62), தொழிலாளி. இவருடைய மனைவி உஷா குமாரி. ராஜன்வில்பிரிட் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் சம்பவத்தன்று மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால் மன வேதனை அடைந்த ராஜன்வில்பிரிட் மோகன் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை உஷா குமாரி மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை ராஜன்வில்பிரிட் மோகன் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story