மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறும் முகாம்


மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறும் முகாம்
x

குருமலையில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறும் முகாம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட அத்தியூர் ஊராட்சியில் குருமலை, வெள்ளைக்கல்மலை, நச்சிமேடு, பள்ளகொல்லை ஆகிய மலை கிராமங்கள் உள்ளது. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் பற்றியும், அதற்கு விண்ணப்பிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, விண்ணப்பங்கள் பெறும் முகாம் நேற்று நடந்தது.

வேலூர் கலால் உதவி ஆணையர் முருகன் தலைமை தாங்கினார். அணைக்கட்டு வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை வரவேற்றார். இதில் மலைவாழ் மக்களுக்கு விண்ணப்பங்களை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.


Next Story