கை குழந்தையுடன் பெண் மாயம்


கை குழந்தையுடன் பெண் மாயம்
x
தினத்தந்தி 30 April 2023 6:45 PM GMT (Updated: 30 April 2023 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே கை குழந்தையுடன் பெண் மாயம் கணவர் போலீசில் புகார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே பாணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ஜோதி(வயது 21). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே தகராறு நடந்தது. இதனால் கணவரிடம் கோபித்துகொண்டு கை குழந்தையுடன் ஜோதி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இதையடுத்து வெங்கடேசன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவரை காணாததால் இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story