பெண் மாயம்


பெண் மாயம்
x

பெண் மாயம் ஆனார்

கரூர்

குளித்தலை அருகே உள்ள பணிக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கேசவராஜ். இவரது மனைவி குணசீலா (வயது 40). கடந்த 20-ந்தேதி வீட்டில் வைத்து கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது குணசீலா வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து கேசவராஜ் தனது மனைவி குணசீலாவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, குணசீலா மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story