மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி


மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
x

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் லட்சுமிநாதபுரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மகேஸ்வரி (வயது 54) இவரது மகள் தீபா. பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் காலை தனது மகள் தீபாவுக்கு மகேஸ்வரி மதிய உணவை கொண்டு சென்று கொடுத்தார். பின்னர், செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது செங்குன்றம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மகேஸ்வரி மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மகேஸ்வரி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்து குறித்து மகேஸ்வரியின் கணவர் குணா வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் வாகன ஓட்டியை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story