வேடசந்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து - பெண் பலி


வேடசந்தூர்  அருகே கார் கவிழ்ந்து விபத்து - பெண் பலி
x

வேடசந்தூர் அருகே நடு சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல்

வேடசந்தூர்,

மதுரை மாவட்டம், தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 42) .இவரது மனைவி சங்கிரவடிவு(36).இவர் மதுரையில் தனியார் கம்யூட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சாய்சங்கர்(7) என்ற மகன் உள்ளார்.இன்று காலை ஈரோட்டில் உள்ள சங்கரவடிவின் பெற்றோர்களை பார்ப்பதற்காக 3 பேரும் காரில் சென்றனர்,காரை நாகராஜ் ஓட்டி வந்தார்.

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த கல்லில் மோதி உருண்டு விபத்துக்கு உள்ளானது.இதில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர்.

அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் சங்கரவடிவு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.படுகாயம் அடைந்த நாகராஜ் , சாய்சங்கர் ஆகியோர் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து குறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story