படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை


படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம்

குடும்பத்தகராறு

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மனைவி திவ்யபாரதி (வயது 31).

குடும்பத்தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் திவ்யபாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த திவ்யபாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பத்தகராறு காரணமாக அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story