பெரியகுளத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை


பெரியகுளத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை
x

பெரியகுளத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்

தேனி

பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தை சேர்ந்த ராமன் மனைவி சரண்யா (30). கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக அதே பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த 5-ந்தேதி சரண்யா அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story