புள்ள வாய்க்கால் தூர்வாரப்படுமா?


புள்ள வாய்க்கால் தூர்வாரப்படுமா?
x

புள்ள வாய்க்கால் தூர்வாரப்படுமா?

தஞ்சாவூர்

நிம்மேலி பகுதியில் உள்ள புள்ள வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புள்ள வாய்க்கால்

பாபநாசம் தாலுகா இரும்புதலை, கோவத்தகுடி பகுதியின் முக்கிய பாசன வாய்க்காலாக புள்ள வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படால் உள்ளது. இதனால் வாய்க்காலில் வெங்காய தாமரை, ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல தடையாக இருந்து வருகிறது. புள்ள வாய்க்கால் மூலம் வடிகால் -பாசன வசதிபெறக்கூடிய நிம்மேலி, கோவத்தகுடி, இரும்புதலை உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் உள்ள பலநூறு ஏக்கர் விவசாய நிலங்கள் முறையான பாசன வசதி பெறமுடியாமலும், மழை காலங்களில் மழைநீரை வடிய வைக்க முடியாமலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

தூர்வார வேண்டும்

எனவே விவசாய நிலங்களை பாதுகாக்க நடப்பு ஆண்டு மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாகவே புள்ள வாய்க்காலை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Next Story