கொள்ளிடம் ஆற்றில் முதலை நடமாட்டமா?


கொள்ளிடம் ஆற்றில் முதலை நடமாட்டமா?
x

கொள்ளிடம் ஆற்றில் முதலை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே சந்தப்படுகை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 52). இவர் கடந்த மாதம் 28-ந் தேதி கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை சந்தப்படுகை கிராமத்திலிருந்து கொள்ளிடம் ஆறு வங்கக்கடலில் கலக்கும் இடமான பழையாறு துறைமுகம் வரை சென்று தேடியும் மாரியப்பன் உடல் கிடைக்கவில்லை. தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் குறைந்துள்ளதால் கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் கொள்ளிடம் போலீசார் மீண்டும் மாரியப்பன் உடலை தேடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி வெள்ளமணல் கிராமத்திலிருந்து படகு வரவழைக்கப்பட்டு அதில் கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ், கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா மற்றும் மீனவர்கள் கொள்ளிடம் ஆற்றில் வெள்ள மணல் கிராமம் வரை படகில் சென்று மாரியப்பன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் படகில் சென்று கொண்டிருந்த போது கொள்ளிடம் ஆற்றில் முதலை நடமாட்டம் இருந்ததாக தெரிகிறது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து அவசரமாக கரை திரும்பியதாக கூறப்படுகிறது.


Next Story