வடக்கு புத்தாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரப்படுமா?


வடக்கு புத்தாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரப்படுமா?
x

வடக்கு புத்தாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரப்படுமா?

நாகப்பட்டினம்

6 கிலோ மீட்டர் திருமருகல் கிராமத்தை சுற்றி வரும் நிலை உள்ளதால் வடக்கு புத்தாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

6 கிலோ மீட்டர் சுற்றி வரும் நிலை

திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் உள்ள ஐவேலியில் 80 ஏக்கர் விவசாய நிலப்பரப்பு உள்ளது. இங்கு விவசாயிகள் குறுவை, தாளடி நெற்பயிரும், உளுந்து, பயறும் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த நிலப்பரப்பிற்கு செல்வதற்கு வாளாமங்கலத்தில் வடக்கு புத்தாறு ஆற்றை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

இந்த 80 ஏக்கர் நிலப்பரப்பை விவசாயம் செய்வதற்கு தேவையான இடுபொருட்கள், உரங்கள் மற்றும் நெல் அறுவடை செய்வதற்கு தேவையான எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்தும் 6 கிலோ மீட்டர் திருமருகல் கிராமத்தை சுற்றி விவசாயிகள் கொண்டு வர வரவேண்டிய நிலை உள்ளது.

விவசாயம் செய்ய முடியாத நிலை

மழைகாலங்களில் ஆற்று கரைகள் சரிந்து இடிந்து விழுகின்றன. இதனால் அவற்றை சுற்றியும் வரமுடியாத நிலை உள்ளது. கடந்த 3 தலைமுறையாக கோடைகாலங்களில் மட்டும் வண்டி பாதையாக சென்று வந்த பாதையும் பொதுப்பணித்துறையால் கரை அடைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாலம் கட்டித்தர வேண்டும்

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஐவேலி பகுதிக்கு செல்ல ஏதுவாக வடக்கு புத்தாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story