மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பலி


மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பலி
x

பணகுடி அருகே லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி அருகே லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

3 வாலிபர்கள்

நெல்லை மாவட்டம் கூட்டப்புளியைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கியம் மகன் ஆல்டன் (வயது 16), தினேஷ் மகன் பிரையோத் (16), சாமி மகன் அன்டனி பிரகாசம் (18).

இவர்கள் 3 பேரும் நேற்று மாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் பணகுடி அருகே புண்ணியவாளன்புரம் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.

லாரி மோதியது

அப்போது, அந்த வழியாக ஒரு லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயம் அடைந்து சாலையில் விழுந்து உயிருக்கு போராடினார்கள்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் பலி

ஆனால், செல்லும் வழியிலேயே ஆல்டன், பிரையோத் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். அன்டனி பிரகாசம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணகுடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story