புதிய ரெயிலுக்கு சிவகாசியில் வரவேற்பு


புதிய ரெயிலுக்கு சிவகாசியில் வரவேற்பு
x

செங்கோட்டை - மயிலாடுதுறை புதிய ரெயிலுக்கு சிவகாசியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

செங்கோட்டை - மயிலாடுதுறை புதிய ரெயிலுக்கு சிவகாசியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிறப்பான வரவேற்பு

செங்கோட்டையில் இருந்து மதுரை வரை இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தற்போது மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் இயக்கப்படும் இந்த புதிய ரெயிலுக்கு சிவகாசியில் ரெயில் ஆர்வலர்கள் சார்பில் நேற்று காலை வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், ரெயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் பார்த்தசாரதி, வர்த்தக சங்கத்தை சேர்ந்த ஜவகர், அரவிந்த்பிரகாஷ், தனசேகரன், கேசவன், சூர்யகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். செங்கோட்டையில் இருந்து சிவகாசி வந்த இந்த ரெயிலை ஓட்டி வந்த ராமர், உதவி ஓட்டுனர் அருள்ராஜ், ரெயில் கார்டு இளங்கோவன் ஆகியோருக்கு ரெயில் ஆர்வலர்கள் சங்கம் சார்பில் சால்வை அணிவிக்கப் பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் அந்த ரெயிலில் பயணம் செய்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

ராஜபாளையம்

அதேபோல செங்கோட்டையிலிருந்து வருகை தந்த சிறப்பு ரெயிலுக்கு ராஜபாளையம் ரெயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராஜபாளையம் ரெயில் பயனாளர்கள் சங்கம் சார்பில் ராமகிருஷ்ணன் தலைமையில் ரெயில் என்ஜினுக்க வாழை மரக்கன்றுகள், மாலை அணிவித்து ரெயில் டிரைவர்கள் ராமர், அருள்ராஜ், கார்டு இளங்கோ ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் ரெயில் பயனாளர்கள் சங்க செயலாளர் ஹரி சங்கர், ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க துணைத்தலைவர் பத்மநாபன், செயலாளர் நாராயண சாமி, செயற்குழு உறுப்பினர் வாசுதேவராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது நிலைய அதிகாரி ஜெயபாலை பாராட்டினர்.


Next Story