ஜோதி பயண குழுவினருக்கு வரவேற்பு


ஜோதி பயண குழுவினருக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 7 Dec 2022 6:43 PM GMT (Updated: 8 Dec 2022 12:29 PM GMT)

ஜோதி பயண குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35-வது மாநாடு கேரளா மாநிலம் திருச்சூரில் வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு நாகை மாவட்டம் கீழ வெண்மணியில் இருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஜோதி பயண வாகனம் சென்று கொண்டிருக்கிறது. அந்த ஜோதி பயண வாகனம் நேற்று மதியம் திருச்சியில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்தடைந்தது. பின்னர் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு மாலையில் வந்த அந்த ஜோதி பயண வாகன குழுவினருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஜோதி பயண குழுவினர் கடலூர் மாவட்டம், தொழுதூர் நோக்கி புறப்பட்டனர்.


Next Story