அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேருக்கு வலைவீச்சு


அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய  2 பேருக்கு வலைவீச்சு
x

படிக்கட்டில் பயணம் செய்ததை தட்டிக்கேட்ட அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேருக்கு வலைவீச்சு

விழுப்புரம்

விழுப்புரம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா துர்காபேட்டை அழகாபுரி நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு(வயது 48). திருவண்ணாமலை கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ்சில் பணியில் இருந்தார். விழுப்புரம் முத்தாம்பாளையம் புறவழிச்சாலை அருகில் பஸ் வந்தபோது விழுப்புரம் பகுதியை சேர்ந்த குமரேசன், பிரகாஷ் ஆகிய இருவரும் பஸ்சின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். உடனே அவர்களிடம் இதுபற்றி சேட்டு தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த குமரேசன், பிரகாஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சேட்டுவை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சேட்டு, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசன், பிரகாஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.


Next Story