விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்வப்பெருந்தகை ஆறுதல்


விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்வப்பெருந்தகை ஆறுதல்
x

விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆறுதல் கூறினார் .

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆறுதல் கூறினார் .


Next Story