முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும்


முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும்
x

முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும்

திருவாரூர்

திருவாரூரில் பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் மாநில விவசாய அணி துணைத்தலைவர் இளங்கோ, மாவட்ட செயலாளர்கள் ரவி, ராஜேந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் கோவி சந்துரு மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நீடாமங்கலம் ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும். திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட குளங்களை தூர்வார வேண்டும். இளைஞர்களை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசன் வரவேற்றார். முடிவில் நகர தலைவர் கணேசன் நன்றி கூறினார்.


Next Story