வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்


வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
x

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருச்சி

தேசிய வாக்காளர் தினம் கடந்த 25-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் கலெக்டர் அலுவலக சாலை வழியாக சென்று கோர்ட்டு அருகே நிறைவடைந்தது. இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வைத்தியநாதன், தேர்தல் தனி தாசில்தார் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story