9 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்


9 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்
x

ஆமணக்கு விதை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.பூசாரிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய 9 மாணவர்கள், அப்பகுதியிலிருந்த ஆமணக்கு செடிகளில் இருந்த விதைகளை தின்றுள்ளனர். பின்னர் அவா்கள் அவரவர் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

இரவு, 7.30 மணியளவில் ஒவ்வொரு மாணவராக வாந்தி, மயக்கமடைந்தனா். அவர்களை பெற்றோர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story