5 சிறுவர்-சிறுமிகளுக்கு வாந்தி- மயக்கம்


5 சிறுவர்-சிறுமிகளுக்கு வாந்தி- மயக்கம்
x

தர்மபுரி அருகே விஷ காய்களை தின்ற 5 சிறுவர்-சிறுமிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி அருகே உள்ள பழைய தர்மபுரி சின்னத்தோப்பு பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் அந்த பகுதியில் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் அங்கு இருந்த விஷ காய்களை தின்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை பெற்றோர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story