விநாயகர் கோவில் சப்பர பவனி


விநாயகர் கோவில் சப்பர பவனி
x

உடன்குடியில் விநாயகர் கோவில் சப்பர பவனி நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

விநாயகர் சதுர்த்தியையொட்டி உடன்குடி கீழ பஜார் கண்டுகொண்ட விநாயகர் கோவில், சிவக்கொழுந்து விநாயகர் கோவில், பெருமாள்புரம், கொட்டங்காடு, தேரியூர் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து விநாயகர் சப்பர பவனி நடைபெற்றது.

இதேபோல் உடன்குடி அருகே விநாயகர் கோவிலில் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் ச.கேசவன் தலைமையில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் கிளை தலைவி பட்டுரோஜா, நிர்வாகிகள் பேச்சியம்மாள், முத்துலட்சுமி, சரஸ்வதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story