விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு


விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு
x

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி (வயது 70) உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். இதனால் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதியன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகத்தில் தொடங்கியது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ந்தேதி நடைபெற உள்ளது.


Next Story