அரசியல் காரணமாக விஜய் எங்களை சந்திக்கவில்லை: பிரேமலதா பேட்டி


அரசியல் காரணமாக விஜய் எங்களை சந்திக்கவில்லை: பிரேமலதா பேட்டி
x

அரசியல் காரணமாக விஜய் எங்களை சந்திக்கவில்லை என தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்தை நடிகர் விஜய் அண்மையில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, கோட் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த நிலையில், அரசியல் காரணமாக விஜய் எங்களை சந்திக்கவில்லை என தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,

விஜய் எங்கள் குடும்பத்தில் ஒருவராக தான் வந்து சந்தித்தார். அரசியல் காரணமாக எங்களை வந்து சந்திக்கவில்லை. கோட் திரைப்படத்தில் முறைப்படி விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்காக திரைப்படக் குழுவுடன் வந்து நன்றி தெரிவித்தார்கள்.என தெரிவித்தார்.


Next Story