வேதாரண்யம் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாக செல்லும் தண்ணீர்


வேதாரண்யம் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாக செல்லும் தண்ணீர்
x

வேதாரண்யம் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாக செல்லும் தண்ணீர்

திருவாரூர்

வலங்கைமான் அருகே வேதாரண்யம் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாக தண்ணீர் செல்கிறது. இதனை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவைக்காவூர் ஆற்று பகுதியிலிருந்து வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வாய்மேடு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் திருவைக்காவூரிலிருந்து பாபநாசம் மற்றும் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், உத்தாணி, கோவிந்தகுடி, ஆலங்குடி, நீடாமங்கலம், மன்னார்குடி நெடுஞ்சாலை ரோட்டின் வழியாக தரைக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் வலங்கைமானில் பல்வேறு இடங்களில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் இருந்து தண்ணீர் வெளியே வீணாக சாலையில் செல்கிறது.

சரிசெய்ய வேண்டும்

திருவோணமங்கலம் கிராமத்தின் கும்பகோணம்- மன்னார்குடி மெயின் ரோட்டில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 1 வாரமாக வீணாக குடிநீர் சாலையில் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. சாலையில் வீணாக செல்லும் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் சாலையில் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே வேதாரண்யம் கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்து தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story