டாக்டருக்கு பிடிவாரண்டு


டாக்டருக்கு பிடிவாரண்டு
x

டாக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை

திருமங்கலம்.

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் உதவி மருத்துவராக பணியாற்றி வருபவர் டாக்டர் வசந்த லட்சுமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் உடலை பிரேதப் பரிசோதனை செய்துள்ளார். விபத்தில் இறந்தவர்களின் வழக்கு திருமங்கலம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க டாக்டருக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. அவர் ஆஜராகாததால் பிடிவாரன்ட் மூலம்ஆஜர்படுத்த திருமங்கலம் நகர் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.


Next Story