மின்கம்பி அறுந்து விழுந்ததால் வந்தே பாரத் ரெயில் நடுவழியில் நிறுத்தம்


மின்கம்பி அறுந்து விழுந்ததால் வந்தே பாரத் ரெயில் நடுவழியில் நிறுத்தம்
x

ஆம்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜினுக்கு செல்லும் உயர் அழுத்த மின் கம்பி அருந்து விழந்ததால் வந்தே பாரத் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு அரை மணி நேரம் தாமதமாக சென்னை நோக்கி சென்றது.

திருப்பத்தூர்

மின் கம்பி அறுந்தது

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஆம்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை 4.45 மணிக்கு சென்னை நோக்கி செல்லும் மார்க்கத்தில் 2 வது பிளாட்பாரத்தில் மின்சார ரெயில் என்ஜினுக்கு செல்லும் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து தண்டவாளத்தில் விழந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டது.

இதன் காரணமாக மைசூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற வந்தே பாரத் ரெயில் விண்ணமங்கலம் ரெயில் நிலையத்தில் மாலை 4.54 மணியளவில் நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ரெயில்வே ஊழியர்கள் மின் கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

½ மணி நேரம் தாமதம்

சுமார் 1 மணி நேரம் போராடி அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியை அகற்றிவிட்டு புதியதாக மின் கம்பியை மாற்றினர். இதனால் சுமார் 1 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

சரிசெய்யப்பட்ட பின்னர் நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரெயில் மாலை 5.27 மணியளவில் ½ மணி நேரம் தாமதமாக மேலும் ஆம்பூர் அருகே பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் டபுள் ெடக்கர் ரெயில் சில நிமிடம் நின்று தாமதமாக சென்னை நோக்கி புறப்பட்டது. ரெயில்கள் நடுவழியில் நின்றதால் ரெயில் பயணிகள் அவதிப்பட்டனர்.


Next Story