அடையாளம் தெரியாத ஆண் பிணம்


அடையாளம் தெரியாத ஆண் பிணம்
x

அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.

கரூர்

வெள்ளியணை அருகே உள்ள மணவாடி ஊராட்சி கத்தாளப்பட்டியில் இருந்து சீத்தப்பட்டி செல்லும் சாலையில் சின்னத்தம்பிபாளையம் பிரிவு ரோடு அருகே அடையாளம் தெரியாத 46 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக வெள்ளியணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளியணை போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story